FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, April 2, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் பணி துவக்கம்

02.04.2015 கோவை, : 
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015-16ம் ஆண்டுக்கான இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கும் பணிகள் நேற்று துவங்கியது. இதில் முதற்கட்டமாக பார்வையற்ற 300 பேருக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கூறியதாவது:
கோவையில் ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் கணக்கெடுப்பு பணிகளும், புதுப்பிக்கும் பணிகளும் நடத்தப்பட்ட வருகிறது. இந்த ஆண்டிற்கு புதிய பஸ்பாஸ் அட்டைகள் மற்றும் புதுப்பித்தல் என மொத்தம் 874 பேருக்கு இலவச பஸ்பாஸ் கேட்டு போக்குவரத்து துறையிடம் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பார்வையற்றவர்கள் 542 பேர், மனவளர்ச்சி குன்றியவர்கள் 93 பேர், கை, கால்கள் ஊனமுற்றவர்கள் 129 பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் 100 பேர் 874 பேருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக பார்வையற்றவர்கள் 300 பேருக்கு நேற்று இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த வார இறுதிக்குள் விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment