FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, June 15, 2015

மாற்றுத் திறனாளிகள் அனுதாபத்தை எதிர்பார்க்கக் கூடாது: ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண்

15.06.2015, சென்னை 
பிறரிடம் எந்த விதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பெண் பெனோ ஜெஃபைன் தெரிவித்தார்.
இவர் தற்போது இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பெனோ ஜெஃபைன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ஐ.எஃப்.எஸ். தேர்வில் இதுவரை பார்வையற்றோர் யாரும் வெற்றி பெற்றதில்லை என்பதால் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் எனத் தீர்மானித்தேன். அதில் இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற தேர்வுகளுக்கு தினமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை படிக்க வேண்டும் என்று சிலர் கூறுவதுண்டு.
தினமும் 5 மணி நேரம்...
என்னைப் பொருத்தவரை எத்தனை மணி நேரம் படிக்கிறோம் என்பதைவிட படித்த தகவல்களை எந்தளவுக்கு நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பதே முக்கியம். எனவே, ஒரே நாளில் 10 புத்தகங்களைப் படிப்பதை விட, ஒரு புத்தகத்தை 10 முறை படிப்பது சிறந்தது. அதாவது திரும்பத் திரும்ப படிக்கும்போது அதில் உள்ள விஷயங்கள் மனதில் நன்கு பதியும்.
இந்தத் தேர்வுக்கு படிப்பவர்கள் தினமும் 5 மணி நேரம் திட்டமிட்டு சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். பழைய வினாத்தாள்களையும் தவறாமல் படிப்பது அவசியம். இதை நான் தொடர்ந்து கடைப்பிடித்ததால் வெற்றி வசமானது. நான் எந்தப் புத்தகத்தை விரும்புகிறேனோ அதை எனது தாய் மேரி, எனக்கு பலமுறை படித்துக் காட்டுவார். என்னைச் சுற்றி இருந்தவர்களை என்னை ஒரு மாற்றுத் திறனாளியாகவே நினைக்கவில்லை. என் வெற்றிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
முன் மாதிரி: வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாதான் என் முன்மாதிரி.
கணினியில் ஜாஸ் (ஒஹஜ்ள்) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி நன்றாக தட்டச்சு செய்ய பயிற்சி மேற்கொண்டது குடிமைப்பணித் தேர்வை எழுத மிகவும் உதவியாக இருந்தது.
அகில இந்திய வானொலி, தமிழ், ஆங்கிலத் தொலைக் காட்சிகளில் அன்றாடச் செய்திகளை தொடர்ந்து கேட்டது, பொது அறிவு தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவியது. போட்டித் தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகள் வெற்றி பெற, பிறரைக் காட்டிலும் அதிகம் உழைக்க வேண்டும். பிறரிடம் எந்தவிதமான அனுதாபத்தையும் மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்க்காமல் வாழ்வில் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதைத்தொடர்ந்து, கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பெனோ ஜெஃபைனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அகாதெமியின் இயக்குநர் பூமிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment