FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, June 15, 2015

"மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை'

தாம்பரம்,15 June 2015


மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு சதவீதம் குறித்து சான்றிதழ் வழங்குவதற்கு முன் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் பொறுப்புணர்வோடும் ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாடு, மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் நீரதா சந்திரமோகன் கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்குவது குறித்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. பயிலரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைபாடு தொடர்பாக மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை டாக்டர் நீரதா சந்திரமோகன் வெளியிட, பாரத் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் வே.கனகசபை பெற்றுக் கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் சுமார் 3.48 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
பார்வைக் குறைபாடு,செவித்திறன் குறைபாடு,வாய் பேசாமை குறைபாடு,கேட்கும் திறன் குறைபாடு, மனநலக் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு ஆகியவற்றுடன் வாழும் மாற்றுத் திறனாளிகள்-சிறப்புக் குழந்தைகளுக்கு சிகிச்சை, பயிற்சி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் குறைபாடு சான்றிதழ் அளிப்பது குறித்த விவரங்களையும் அறிந்து கொள்வது அவசியம் என்றார் அவர்.

No comments:

Post a Comment