FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, August 25, 2015

விருதுநகரில் அரசு ஆணை நகல் எரிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 37 பேர் கைது

விருதுநகர், 25 August 2015
 விருதுநகரில் அரசு நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 37 பேரை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில குழு உறுப்பினர் தேன்மொழி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கற்பகம், முருகேஸ்வரி, அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க ஆண்கள் இருக்கக் கூடாது, ரூ.5000 மதிப்புக்கு மேல் சொத்து இல்லாமல் இருப்பது போன்ற பொல்லாத விதிமுறைகளை அரசு கடைபிடித்து வந்தது. தற்போது, கடந்த ஏப்.17ம் தேதி வெளியிட்ட அரசாணையில் உதவித் தொகை பெற அனாதையாக இருக்க வேண்டும் என சமூக நலத்துறை உத்தரவு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இம்மாவட்டத்தில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அரசு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிவகாசி-21 பேரும், அருப்புக்கோட்டை-11 பேரும், ராஜபாளையம்-54 பேரும், சாத்தூர்-69 பேரும் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 பேரும் என மொத்தம் 196 பேரை போலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment