FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, August 14, 2015

சாகும்வரை மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம்: 3 பேர் மயக்கம்!

14.08.2015, மதுரை:
 மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். 3 பேர் மயக்கம் அடைந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 2வது நாளாக மதுரையில் இன்று நடத்தி வருகிறார்கள். காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர், மயக்கமடைந்து பேச்சு மூச்சில்லாமல் போனார்கள்.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வந்த ஆம்புலன்சும் ரிப்பேர் ஆகிவிட்டது. சுமார் அரைமணி நேரம் கழித்து, தாமதமாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களின் போராட்டம் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இவர்களின் பிரச்னைகளை கேட்காமல், கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



போராட்டக்குழுவினரிடம் பேசினோம். "படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். படிக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்டிக்கடை வைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். வங்கி கடன் தர வேண்டும். ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடைகளையும், பொதுக்கழிப்பிடங்களையும் மாற்று திறனாளிகள் நிர்வாகிக்க தர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவார் மீது தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தைப்போல கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். எங்கள் பிரச்னைகளை தமிழக முதல்வரிடம் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தமிழகத்தில் வாழும் 24 லட்சம் மாற்று திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால், மாவட்ட நிர்வாகமோ, அமைச்சரோ எங்கள் பிரச்னைகளை கேட்க வரவில்லை. அதனால்தான் சாகும் வரை போராட்டத்தில் இறங்கி விட்டோம்" என்றார்கள்.

நாளை சுதந்திரதினம் கொண்டாடப்படும் சூழலில் மாற்று திறனாளிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.

No comments:

Post a Comment