FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, February 29, 2016

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது

திருவண்ணாமலை, பிப்.29-
மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலையில உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குழு போட்டி மற்றும் தனித்திறன் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றோர் பங்கேற்கும் மாநில அளவிலான போட்டிகள் சிவகங்கை மாவட்டத்தில் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடக்கிறது.

திருவண்ணாமலையில் நாளை நடக்கும் போட்டியில் குழு போட்டிகளும், தனித்திறன் போட்டிகளாக கால் ஊனமுற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றவர்களுக்கு குண்டு எறிதல் போட்டியும், இரு கால்களும் ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும் நடத்தப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கான பிரிவில் முற்றிலும் பார்வையற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், மிகக்குறைவான பார்வையற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் குண்டு எறிதல், சாப்ட் பால் போட்டியும் நடத்தப்படுகிறது.

மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க வயது வரம்பு ஏதுமில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், குழு போட்டியில் ஏதாவது ஒன்றிலும், தனித்திறன் போட்டியில் ஒன்றிலும் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment