FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, February 9, 2016

கைதிகளை போல சித்ரவதை செய்த போலீசார்: மாற்றுத்திறனாளிகள் குற்றச்சாட்டு


09.02.2016, தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கவேண்டும், உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கவேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை முதலே 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜெயலலிதா செல்லும் காமராஜர் சாலையில், மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, அங்கு சாலையில் இரண்டு புறங்களிலும், எழிலக வளாகத்திற்குள்ளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காலை 10 மணி அளவில் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர் தீபக் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் காமராஜர் சாலையில் அமர முற்பட்டனர். அதற்குள் போலீசார் விரைந்து வந்து, அவர்களை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் ஆவின் பாலகம் நுழைவு வாயில் வழியாக அழைத்துச்சென்றனர்.

இதைத் தொடர்ந்து, வேளாண்துறை அலுவலகம் வழியாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் விருந்தினர் மாளிகை வளாகத்தில் முற்றுகையிட வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


4 மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராகவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை வெளியே செல்ல விடாமல் நான்கு நுழைவு வாயிலும் அடைக்கப்பட்டது. மேலும், பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததாலும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால், போலீசார் கேட்டை திறக்க மறுத்தனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் கயிறால் கட்டப்பட்டிருந்த கேட்டை இழுத்து திறக்க முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, டிசம்பர் 3 இயக்க தலைவர் தீபக்கை போலீசார் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாற்றுத்திறனாளிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிலர் காமராஜர் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர் தீபக் கூறும்போது, எங்களை கைதிகளை போல போலீசார் சித்ரவதை செய்தார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று எழுத்துப்பூர்வமாக அரசு தரப்பில் இருந்து உறுதிமொழி தரும் வரையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களில் 600 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. இதனால், 400-க்கும் மேற்பட்டோர் மதிய உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர் என்றார்.

No comments:

Post a Comment