FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, February 2, 2016

ஒடிசாவில் பேச்சுத்திறனற்ற மற்றும் காது கேளாத இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

புவனேஸ்வர், பிப்.2-
ஒடிசா மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பேச்சுத்திறனற்ற மற்றும் காது கேளாத இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததோடு அவரது தாயை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தின் ஜமாஜரி கிராமத்தை சேர்ந்த அந்த 18 வயது இளம்பெண்ணின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த அதே பகுதியை சேர்ந்த சுஜித் குமார் டெஹூரி(26) என்பவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் வேறு யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்ட அவர், அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

வெளியே போயிருந்த அந்த பெண்ணின் தாயார் மாலையில் வீடு திரும்பினார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமையை தாயாரிடம் அவர் அழுதபடி ஜாடை மொழியில் கூறினார். இதையடுத்து, ஆத்திரமடைந்த பெண்ணின் தாயார், சுஜித் குமாரை தேடிச்சென்று நியாயம் கேட்டபோது, நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியே சொன்னால் உன்னையும் உன் மகளையும் கொன்று விடுவேன் என அவர் மிரட்டினார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பேச்சுத்திறனற்ற இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து குற்றவாளி சுஜித் குமாரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment