FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, March 17, 2016

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மூவருக்கு 8 ஆண்டு சிறை

திருநெல்வேலி, 17.03.2016, 
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தலா 8 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த, வாய் பேச இயலாத, காது கேளாத 38 வயதுப் பெண், கணவரை இழந்தவர். தன் தந்தையுடன் வசித்து வரும் இவர், ஆடு மேய்த்து வந்தார்.

கடந்த 18.11.2013இல் வழக்கம்போல் அப்பெண் தனது உறவுக்கார சிறுமியுடன் அங்குள்ள தோமஸ்புரம் காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்கு வந்த டேவிஸ்புரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் சரவணமுத்து (26), முனியசாமி மகன் செல்வம் (38), சௌந்திரபாண்டியன் மகன் லட்சுமணகுமார் (25) ஆகிய மூவரும் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். பின்னர், அப்பெண்ணை காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர்.

உடன் சென்ற சிறுமி, தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீஸார், அப்பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட சரவணமுத்து, செல்வம், லட்சுமணகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், நீதிபதி ஏ.அப்துல்காதர் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார். மற்றொரு பிரிவின் கீழ், மூவருக்கும் தலா ஓராண்டு சிறையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகை ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், சிறைத் தண்டனையை மூவரும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment