FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, July 12, 2016

கல்விக் கடன் மறுப்பு: DEAF மாற்றுத் திறனாளியை படிக்க வைக்கத் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்

மதுரை, 12.07.2016
ஐந்து ஆண்டுகள் கல்வி கடன் வழங்கிய நிலையில், இறுதி ஆண்டுக்கு வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டதால் மாற்றுத் திறனாளி மகனைப் படிக்க வைக்க வழியின்றி தவிக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகன். இவருக்கு 3 குழந்தைகள். மூவருமே வாய் பேச முடியாத, காது கேளாத குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள். இவர்களில் மூத்த மகள் பிஏ முடித்துள்ளார். இரண்டாவது மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். மூன்றாவது மகள் பிளஸ் 2 படிக்கிறார். பிடெக் படிக்கும் ராகேஷுக்கு, பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கு தலா ரூ.65 ஆயிரம் வழங்கியுள்ளனர். இறுதி ஆண்டுக்கு வங்கிக்கு விண்ணப்பம் அளித்த நிலையில், கடன் தொகையை வழங்க மறுத்துவிட்டனராம். இந்நிலையில், உதவி கோரி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில் பாலமுருகன் மனு அளித்தார்.

அவர் கூறியது: வாடகை ஆட்டோவில் ஓட்டுநராக வேலை செய்கிறேன். இதில் கிடைக்கும் சம்பளத்தில் தான் 3 குழந்தைகளையும் படிக்க வைக்கிறேன். இரண்டாவது மகன் ராகேஷுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.95,200 கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ரூ.65 ஆயிரம் வங்கிக் கடன் கிடைக்கும் நிலையில், எஞ்சிய தொகையை மிகவும் சிரமப்பட்டு செலுத்தி வந்தேன். இறுதி ஆண்டில் வங்கிக் கடனையும் நிறுத்திவிட்டனர். கல்விக் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது எனத் தெரியவில்லை.

ஐந்து ஆண்டுகள் முடித்துவிட்ட நிலையில், கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பு பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. வங்கிக் கடன் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment