FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, August 28, 2016

கரம் பிடிக்க மனம் விரும்புதே...

27.08.2016, மதுரை, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். தங்களது வாழ்விலும் திருமணம் நடக்குமா என்ற ஏக்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் நல் வாழ்க்கை அமையும் என எடுத்து காட்டும் வகையில் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடந்தது.திருமணம் செய்ய விரும்பும் மாற்றுதிறனாளிகள் தங்களுக்கு எந்த மாதிரியான துணை தேவை என கூறி ஜோடியினை தேர்வு செய்தனர். 'இவர்களை பார்த்து 'பாவம் என பரிதாபபட வேண்டாம். வாழ்க்கை துணையாக்கி ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்ந்து காட்டுங்கள்' என்ற அறிவிப்பு பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தியது.
அன்னநடை நடந்து கொஞ்சும் மொழி பேசி இளம்பெண்கள் சிலர் சுயம்வரத்திற்கு வந்து 'எங்களுக்கு மாற்றுத்திறனாளி மாப்பிள்ளை தேவை' எனக்கூறி கைதட்டலை பெற்றனர்.

கடந்த ஆண்டு சுயம்வரத்தில் புகைப்பட கலைஞர் வாசுதேவன், மாற்றுத்திறனாளி பூங்கோதையை வாழ்க்கை துணையாக்கினார். தற்போது தங்கை பூங்கொடிக்கு மாற்றுத்திறனாளி மண
மகனை தேர்வு செய்ய வந்திருந்தார்.

''மாற்றுத்திறனாளி மனைவியுடன் மகிழ்ச்சியாக உள்ளேன். என் தங்கையும் இதுபோல் மகிழ்ச்சியாக வாழ மாற்றுத்திறனாளியை விரும்புகிறார். அவரது வாழ்வில் ஒருவருக்கு உதவும் பாக்கியம் கிடைக்கும்,'' என்கிறார் வாசுதேவன்.

பட்டதாரி பாக்கியலட்சுமி,''மாற்றுத்திறனாளிக்கு உதவ வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆர்வம். அதனால் மாற்றுத்திறனாளி தேர்வு செய்கிறேன்'' என்றார். கேட்டரிங் படித்த ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை தேர்வு செய்ய வந்திருந்தார்.
சுயம்வரத்தில் தேர்வாகும் ஜோடிகளுக்கு பூ வைத்தல், நிச்சயதார்த்தம் என சடங்குகள் முடிந்து, டிசம்பரில் சென்னையில் திருமணம் நடக்க உள்ளது. ஜோடிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சீர்வரிசை பொருட்கள் வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment