FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, August 19, 2016

சமஉரிமை மறுக்கப்படுவதை முதல்வர் அறிவாரா?' -மாற்றுத் திறனாளிகளின் ஆதங்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை வழங்குகிறோம்' என்ற பெயரில் புறக்கணிக்கும் வேலைகளே தொடர்ந்து நடக்கின்றன. ' அம்மா திட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்காமல், பயனாளிகளைக் குறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்' என வேதனைப்படுகின்றனர் மாற்றுத் திறனாளிகள்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 10-ம் தேதி, சமூகநலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததும், மாற்றுத் திறனாளிகள் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.' இதில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்தோ, பணியிடங்களை நிரப்புவது குறித்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை' என வேதனைப்படுகின்றனர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சங்கத்தின் பொதுச் மாநில செயலாளர் நம்புராஜன்,

" அரசு கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 13 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஆனால், மாநிலம் முழுவதும் 45 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், 'மாற்றுத்திறனாளிகள் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், நாட்டிலேயே மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்புக் கவனம் எடுத்து வருவது தமிழக அரசுதான் என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். நன்றாகப் படித்து முடித்தும், வேலையில்லாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. அரசிடம் வேலை கேட்டுத் தொடர்ந்து போராடி வருகின்றனர். சட்டப்படியான அரசு வேலைவாய்ப்புகளைக் கண்டறியாமல், அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதைப்பற்றி எல்லாம் மானியக் கோரிக்கை விவாதத்தில் சாதகமான அறிக்கை எதுவும் வைக்கப்படவில்லை.

மேலும், 'நாற்பது சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவித்தார்' முதல்வர். கடந்த பிப்ரவரி 22 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரையில் ஒரு நபருக்குக் கூட புதிய உத்தரவின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஏற்கெனவே மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெற்று வந்த பல்லாயிரம் பேருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டுவிட்டது.

மாவட்டம்தோறும் மூன்றாயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 'அம்மா திட்டம் மூலம் உதவித்தொகை தருவோம்' என எழுத்துப்பூர்வமான உத்தரவு வழங்கப்பட்டவர்களுக்கும் உதவி வந்து சேரவில்லை. மனநலம் பாதித்தவர்களை மாற்றுத் திறனாளிகள் கணக்கிலேயே அரசு சேர்க்கவில்லை. இவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது அரசின் கொள்கை இல்லை என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது. இது மாற்றுத் திறனாளிகளின் சட்டத்தையே மறுப்பதாகும். சட்டமன்றக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படாமல், வெறும் அறிவிப்புகளாகவே இருப்பதை முதலமைச்சர் அறிவாரா?" எனக் கொந்தளித்தார்.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment