FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 19, 2016

தேநீர் விடுதியில் வேலை பார்க்கும் DEAF விளையாட்டு வீராங்கனைகள்!

ஜாம்ஷெட்பூர் நகர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரில் அண் மையில் துவங்கப்பட்ட லா கிராவிடீ தேநீர் விடுதி இன்று அகில இந்திய அளவில் பிர பலம் அடைந்துள்ளது.

உலக நாடுகளின் தேநீர் மய்யமாகச் செயல்படும் இந்த தேநீர் விடுதி, 105 ரக தேநீரை ஆர்டரின் பேரில் தயாரித்து தேநீர் பிரியர்களுக்கு வழங்கிவருகிறது.

இதற்காக உலகின் பல பகுதியிலிருந்து தேயிலை மற்றும் மூலிகை, வாசனை செடி, வாசனை இலைகள், வாசனைப் பூக்கள் இவற்றை தருவிக்கிறார்கள். நூற்றி அய்ந்து வகை தேநீர் தயாரிப்பதினால் மட்டும் இந்த விடுதி அகில இந்திய பிரபலம் அடைய வில்லை.

இந்த விடுதியில் தேநீர், சிற்றுண்டி, உணவு வகைகள் தயாரித்து பரிமாறும் ஏழு பெண்கள் பேசும், கேட்கும் திறன் இல்லாதவர்கள். விளையாட்டு வீராங்கனைகள். சர்வதேச, தேசிய விருதுகள் பல பெற்றவர்கள்.

தகுதி, திறமை, கிடைத்த விருதுகள் எதுவும் அங்கீ கரிக்கப் படாததினால்.... வேலை எதுவும் கிடைக்காததினால், எதிர்காலம் இருண்டு கேள்விக்கு குறியாகி மிரட்டியதால் மிரண்டு போனவர்கள். அவர்களின் குறைந்த பட்ச வாழ்வாதாரத்திற்காகத் தொடங்கப் பட்டது தான் லா கிராவிடீ.

காது கேட்காத ஊமைகளான இந்த ஏழு பேர்களும் லா கிராவிடீ யை நிர்வகித்து வரும் நேர்த்தி அலாதியானது. விடுதிக்கு வருபவர் களை வரவேற்பது, என்ன வேண்டும் என்று கேட்டு சிற்றுண்டி தயாரித்து வாடிக்கையாளர் விரும்பும் தேநீர் என்ன என்பதை அறிந்து அதைத் தயாரித்து வழங்குவதை ஒரு கலை யாகவே செய்து வருகின்றனர். மவுன உலகில் வாழும் இவர்களின் மொழி சைகை தான்..

லா கிராவிடீ யில் பணிபுரியும் குர்விர் கவுர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் இறகுப் பந்தாட் டத்தில் தங்கப் பதக்கம் வென்றவர்.

குர்விர் கவுரின் சைகை மொழி, வாடிக்கை யாளர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்குப் புரிவதில் சிரமம் ஏதும் இருந்தால் உதவிக்கு வந்து மொழி பெயர்ப்பவர் லா கிராவிடீ யின் உரிமையாளர் அவினாஷ் துக்கர்.

“ஒரு முறை நான் தற்செயலாக அவினாஷ் துக்கரைச் சந்தித்தேன். பேச்சுவாக்கில் விருது கிடைத்ததற்குப் பிறகு என்னென்ன மாற் றங்கள் ஏற்பட்டன’’ என்று விசாரித்தார். “விருது கிடைத்தது அவ்வளவுதான்.. அர சாங்க உதவிகள் எதுவும்கிடைக்கவில்லை’’.. என்று சொன்னேன். ஜார்கண்டைச் சேர்ந்த இதர விளையாட்டு வீராங்கனைகளை ஒன்று சேர்த்தார்.

மீதம் ஆறுபேருமே என்னைப் போன்றே பேச முடியாதவர்கள். காதும் கேட்காது. எங்கள் ஏழு பேரைக் கொண்டு இந்தத் தேநீர் விடுதியை உருவாக்கினார். உணவு வகைகள், பல சுவைகளில் தேநீர் தயாரிப்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள்’’ என்கிறார் குர்விர் கவுர்.

லா கிராவிடீ உரிமையாளர் அவினாஷ், “இப்படி ஏழு திறமையானவர்கள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தொடக்கத்தில் இவர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் தர வேண்டி வந்தது. பயிற்சிக்குப் பிறகு உணவு தயாரிப்பதில், வாடிக்கையா ளர்களை வரவேற்பதில், ஆர்டர் பெறுவதில், பரிமாறுவதில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டார்கள்.

வாடிக்கையாளர்களுக்கும் திருப்தி. விரை வில், லா கிராவிடீ கிளைகளை ஆரம்பிக்கப் போகிறேன். இந்த வீராங்கனைகள் மாதிரி இன்னும் நூறு பேருக்கு வேலை வாய்ப்பு தரும் திட்டம் உருவாக இந்த ஏழு பெண்களின் உழைப்பு எனக்குத் தந்திருக்கும் நம்பிக் கைதான் காரணம்‘’ என்கிறார் அவினாஷ்.

No comments:

Post a Comment