FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, December 3, 2016

உலகம் \ மனித உரிமைகள் - உலக மாற்றுத்திறனாளிகள் நாள் டிசம்பர் 03



டிச.02,2016. மாற்றுத்திறனாளிகள், மற்ற மனிதருக்குச் சமமாகவும், மதிப்புமிக்கவராகவும் முழுமையாக ஏற்கப்படுவதற்கு, மேலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

டிசம்பர் 03, இச்சனிக்கிழமையன்று, கடைப்பிடிக்கப்படும், உலக மாற்றுத்திறனாளிகள் நாளுக்கு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலகளவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட மனித உரிமைகள் ஒப்பந்தங்களில், மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒப்பந்தமும் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 169 நாடுகளின் கையெழுத்துடன், மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பொது அவை, இசைவு தெரிவித்தது என்றும், கூறியுள்ளார் பான் கி மூன்.

மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தில் முழுமையாக ஏற்கப்படுவது, 2030ம் ஆண்டின் ஐ.நா.வின் இலக்கை எட்டுவதற்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்பட்டு, அவர்கள், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் முழுமையாக ஏற்கப்படுமாறு அழைப்பு விடுத்தார்.

உலகில் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள், உடல் அல்லது, மன வளர்ச்சியில், ஏதாவது ஒரு குறைபாடுள்ளவர்கள். மாற்றுத்திறனாளிகளுள், பத்து கோடிக்கு அதிகமானவர்கள் சிறார். மாற்றுத்திறனாளிகளுள், எண்பது விழுக்காட்டினர், வளரும் நாடுகளில் உள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment