FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, December 7, 2016

காதுகேளாத வாய்பேசாத பெண் கேட்கும் நீதி..... காதை பொத்திக் கொள்ளும் அரசு!

05.12.2016
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே! ஆனால், அதிகார வர்க்கத்தினால், சீரழிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிச் சிறுமி ஒருவர் வருடக் கணக்காக நீதி கிடைக்காமல் மனம் வெதும்பிக் கிடக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்குகிறது.

வாய்பேசாத - காதுகேளாத சிறுமி !

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடகரை கிராமத்தைச் சேர்ந்த காது கேளாத - வாய்பேசாத சிறுமி அவள். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாற்றுத்திறன் சிறுமியை கடந்த 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வீசிவிட்டுச் சென்றது.

சுயநினைவில்லாமல், உடல் முழுவதும் காயங்களுடனும் சாலையோரத்தில் துடித்துக் கிடந்த மகளை அருகிலுள்ள வீரபத்ரா மருத்துவமனையில் சேர்ப்பதற்காகத் தூக்கிச் சென்றார் அவரது தந்தை. ஆனால், 'காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், நாங்கள் சிகிச்சைக்கு சேர்க்கமாட்டோம்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது போலீசாரோ அந்தப் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்ய மறுப்பு !


இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் தலையிட்டு போராட்டம் நடத்திய பிறகே வழக்கைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியை சீரழித்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் மகன்கள் என்பதால் விசாரணையை அப்படியே கிடப்பில் போட்டது போலீஸ். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டசிறுமியின் தந்தை வீரபத்ரா, தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் உறுதுணையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோன்று வழக்குப் பதிவு செய்ய மறுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போதுமான நிவாரணமோ அல்லது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையோ கிடைக்கவில்லை.இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடர்கிறது.

அரசும் சமூகமும் நீதிகிடைக்காமல் இருக்கக் காரணம் ! 

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலமாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், ''இதுவரையிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கவில்லை'' என்று கவலை தெரிவிக்கிறார் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்பிராஜன்.

''சி.பி.சி.ஐ.டி ஒரு முறை மட்டுமே வந்து விசாரணை நடத்திவிட்டுச் சென்றார்கள். அதோடு இந்த வழக்கு நிற்கிறது. கோடகரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கவுன்சிலர் மகனும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் சரியாக விசாரிக்கவில்லை. சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்தச் சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்ன கொடுமைகள் இழைத்தாலும் கேட்க நாதியில்லை என்பதே இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படாமல் இருக்கக் காரணம். நாங்களும் பலமுறை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டுவிட்டோம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை'' என்று அலுத்துக்கொண்டார் நம்பிராஜன்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள் தற்போது வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் இந்த சமூகத்தின் சாடலால் மனம் வெதும்பி தனிமையில் தத்தளிக்கிறாள்.

எப்போது அவளுக்கு நீதி கிடைக்கும்?

No comments:

Post a Comment