FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, December 7, 2016

மாற்றுத்திறனாளிகள் மன உறுதிக்கு வாழ்த்துகள் - ட்விட்டரில் பிரதமர் மோடி

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Disabled Persons) கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளின் பிரச்னைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும். இயலாமையை இல்லாமை ஆக்குவது என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.

குறிப்பாக மாற்றுத் திறனாளிகளை உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களிடம் மறைந்து கிடக்கும் தனித் திறமைகளை வெளிக் கொணர வேண்டும். அவர்களிடத்தில் நம்பிக்கை ஊட்ட வேண்டும். மாற்றுத் திறனாளி மறுவாழ்வுப் பணியில் ஈடுபடுபவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பல நாடுகளில் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுகத்தில் மாற்றுத் திறனாளிகளின் நிலை மேம்பட சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலமாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் மாற்றுத் திறனாளிகள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிந்துள்ளார். அதில், "மாற்றுத் திறன்கொண்ட சகோதரர்கள், சகோதரிகளின் மன உறுதிக்கு தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளும், சமத்துவமும் முழுமையாக நாடு தழுவிய அளவில் கிடைத்திட முழு வீச்சில் செயல்படுவோம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment