FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, March 5, 2017

தெய்வக் குழந்தைகளுடன் 2 மணி நேரம்! சமுதாய சேவையில் ஐ.டி., ஊழியர்கள்

04.03.2017
அவர்களை தெய்வக்குழந்தைகள் எனலாம். எண்ணற்ற திறமைகள் அவர்களுக்குள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர ஊக்குவிப்பாளர்கள் இல்லாமல், நான்கு சுவற்றுக்குள் முடங்குகியுள்ளனர். உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்ல, அவர்களது உதடுகள் துடிக்காது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், நமது கேள்வியே அவர்களது செவிகளில் விழாது. ஆம், அவர்கள் யாரெனில், வாய்பேச முடியாத, காதுகேளாத மாணவ - மாணவியர்.

இவர்கள் நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு கிடக்கக் கூடாது; கல்வியறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ஆர்.எஸ்.புரத்தில் உயர்நிலைப்பள்ளியை நடத்துகிறது, மாநகராட்சி. இங்கு, 32 பேர் படிக்கின்றனர். இவர்களில், நான்கு பேர் மாணவியர். ஐந்து ஆசிரியர்கள், சைகை மூலம் கல்வி கற்பிக்கின்றனர்.
இவர்கள், நன்றாக படித்தாலும், வேலை கிடக்காமல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, தொழிற்கூடமும் நடத்தப்படுகிறது. கோயமுத்துார் சிட்டி ரவுண்ட் டேபிள் சாரிடபிள் சொசைட்டி சார்பில், 'பிட்டிங், டிரில்லிங், வெல்டிங், பிளம்மிங்' உள்ளிட்ட தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும், 45 நிமிடம் தொழிற்கல்வியை, 25 ஆண்டுகளாக சந்தானம் என்பவர் பயிற்றுவிக்கிறார். அவர் கூறுகையில், ''காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவ, மாணவியருக்கு தொழிற்கல்வி கற்றுத்தருவதோடு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 300 முதல், 500 ரூபாய் தினச்சம்பளம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஓரளவு சமாளித்துக் கொள்வர்,'' என்றார்.

இப்பள்ளி செயல்பாட்டை அறிந்த, ஐ.டி., நிறுவன ஊழியர்களான மீனாட்சி, ப்ரீத்தி ராமசாமி ஆகியோர், அம்மாணவர்களுடன் விவாதித்த போது, மாணவர்கள் சோர்வுடன் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, ஆரோக்கியமுடன் வாழ விளையாட்டு முக்கியம் என, அவ்விரு ஊழியர்களும் எடுத்துரைத்தனர்.

இருவருமே மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள். தங்களது திறமையை இவர்களுக்கு பயிற்றுவிக்க முடிவு செய்து, தினமும் 2 மணி நேரம் ஒதுக்குகின்றனர். காலை, 8:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை, காதுகேளாத, வாய்பேச முடியாத அம்மாணவர்களுக்கு வாலிபால் மற்றும் டேபிள் டென்னிஸ் பயிற்சி அளிக்கின்றனர். தங்களது சொந்த செலவில், சீருடை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அவர்களும் ஆர்வத்துடன் பயிற்சி எடுக்கின்றனர்.

மீனாட்சி கூறுகையில், ''ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறோம். பணம் சம்பாதிக்கிறோம். பணம் ஈட்டுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இப்பள்ளியை பற்றி கேட்டறிந்ததும், மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க அனுமதி கேட்டோம். மாநகராட்சி அனுமதி கிடைத்ததும், எங்களது செலவில் மைதானம் தயார் செய்து, ஏழு மாதங்களாக பயிற்சி அளித்து வருகிறோம். இதில், எங்களுக்கு மனதிருப்தி கிடைக்கிறது,'' என்றார்.இவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால், 97895 51573 என்ற எண்ணுக்கு 'டயல்' செய்யுங்க!

No comments:

Post a Comment