FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Saturday, March 4, 2017

நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்!

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய நடிகர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்தனர்.

அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். சமீபத்தில், சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அரசியல் தலைவர்கள் சிலரை, மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் ராதாரவியின் செயலைக் கண்டித்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ராதாரவியின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர். ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் டிசம்பர் 3 அமைப்பினர் முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர்.

No comments:

Post a Comment