FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, August 22, 2017

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அரசு உத்தரவு


சமூகப்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை தடுப்பதற்கு மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் தமிழக அரசின் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே. சத்யகோபால்,இஆப அவர்கள் தலைமையில் எழிலகத்தில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் திரு.ஆஷிஷ் குமார்,இஆப, சமூகப் பாதுகாப்புத்திட்ட இயக்குநர் திருமிகு சுதா தேவி,இஆப உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அனைத்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் ஜான்ஸிராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோரும், டிசம்பர்-3 இயக்கத்தின் சார்பில் தலைவர் தீபக், தேசிய பார்வையற்றோர் இணைய இயக்குநர் மனோகரன், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜமால் அலி உள்ளிட்ட மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கடந்த ஆக-10 அன்று தலைமை செயலகத்தில் சமூகநலத்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அரசின் சார்பில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதில் மாநிலம் முழுவதும் உள்ள இடற்பாடுகளை தடுக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய கலந்தாய்வு கூட்டங்களை வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் நடத்தவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போர் பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்கவும், மாவட்ட அரசு இணையதளங்களில் ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு ஆக-18 தேதியிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு குறித்த கூடுதல் விபரம் பின்வருமாறு.

வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போரை வரிசைப்படி ஆவணத்தில் பதிவு செய்வதும், கண்டிப்பாக சீனியாரிட்டி அடிப்படையிலேயே உதவித்தொகைக்கான உத்தரவு வழங்க வேண்டும். மன நிலை பாதித்தோர், பார்வையற்றோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பிரிவினர் இதுவரை விண்ணப்பித்து உதவித்தொகை வழங்கப்படாதவர்களின் படிவங்களை பரிசீலித்து உதவித்தொகை வழங்க வேண்டும். என்பன போன்ற உத்தரவுகள் வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment