FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, October 26, 2018

இழந்த செவித் திறனை மீட்டக முடியுமா?

25.10.2018
காது கேட்காமல் போவதை குணப்படுத்தும் ஆய்வில், முக்கிய முன்னேற்றத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

நாள்பட காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. உட் காதுப் பகுதியில் நத்தையின் சுருண்ட கொம்புகளைப் போல உள்ள பகுதியில் வளரும் முடி வடிவில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது அதில் ஒன்று. ஒரு மனிதருக்கு சராசரியாக, 15 ஆயிரம் செல்கள் இருக்கும்.

மிகையான இரைச்சல், அத்துமீறிய ஓசை போன்றவற்றால் இந்த நுண்ணிய செல்கள் நாளடைவில் பாதிக்கப்படுகின்றன. இதனால், காதின் ஒலி உணர் திறன் குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் காது கேளாமல் போய்விடும் ஆபத்தும் உண்டு.

மனிதனின் உடலில் உள்ள பிற செல்களைப் போல முடி செல்கள் ஒருமுறை பாதிக்கப்பட்டால், மீண்டும் வளர்வதில்லை. எனவே, அவற்றின் வளர்ச்சியை மீண்டும் துாண்ட முடியுமா என, விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

அண்மையில் பிரிட்டனில் உள்ள ரோசெஸ்ட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், எலிகளின் காதுகளில் உள்ள முடி செல்கள், மீண்டும் வளர்வதற்கு சமிக்ஞை தரும் புரதங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஆனால், அவை ஏனோ, முடி செல்கள் வளர்வதற்கு சமிக்ஞை தராமலேயே இருக்கின்றன. அந்த செல்களுக்கு துாண்டுதல் தந்த போது, அவை மீண்டும் வளர ஆரம்பித்தன.

எலிகளின் மீதான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் இழந்த செவி கேட்கும் திறனை மீட்க முடியும் என நிரூபித்துள்ளனர். இதே போன்ற ஆய்வை செவித் திறனை இழந்தோர் மீது விரைவில் அவர்கள் துவங்கி வெற்றி கண்டால், காது கேளாமையை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

No comments:

Post a Comment