FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, March 16, 2019

மனைவி, குழந்தையை கொலை செய்த காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனைவேலூர் கோர்ட்டு தீர்ப்பு

08.03.2019
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே குடியிருப்பு பகுதி சிவசக்திசெல்வவிநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற அணிலா (வயது 38). கூலித்தொழிலாளியான இவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மீனா என்ற மணிலா (20). இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது.

பிரகாஷ் தனது மனைவி மீனாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் 4.5.2016 அன்று அதிகாலை 4.30 மணி அளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் கிடந்த கல்லை எடுத்து மீனாவின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தார். மேலும் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்து குழந்தையையும் கொலை செய்தார். இந்த சம்பவம் அப்போது வேலூர் மற்றும் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தவழக்கு வேலூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர், இந்த வழக்கு வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி எஸ்.குணசேகரன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் மாற்றுத்திறனாளி என்பதால் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வசதியாக சத்துவாச்சாரியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் மணிமாறனுக்கு சிறப்பு அழைப்பாணை விடுக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு விசாரணைக்கு வரும் சமயங்களில் ஆசிரியர் மணிமாறனும் கோர்ட்டில் ஆஜராகி, சைகை மூலம் பிரகாசுக்கு விளக்கி விசாரணைக்கு உதவினார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று கோர்ட்டில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை வாதாடினார். ஆசிரியர் மணிமாறனும் ஆஜராகினார்.

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.குணசேகரன் தீர்ப்பு கூறினார். அதில், பிரகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மனைவியை கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும், குழந்தையை கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த இரட்டை ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பில் கூறி உள்ளார். இதையடுத்து போலீசார் பிரகாஷை வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். வழக்கு இந்த நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட 11 நாட்களுக்குள் 5 முறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment