FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, July 29, 2019

உலகின் 'காது கேளாத அழகி’...! முதன்முறையாக பட்டம் வென்ற இந்தியப் பெண்


திறமை இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதற்கு இதைவிட சிறந்த உதராணம் வேறு என்ன இருக்க முடியும்..? அழகு என்ற ஒற்றைத் திறமையைக் கொண்டு தன்னிடம் இருக்கும் குறையை முறியடித்திருக்கிறார் 21 வயது விதிஷா பாலியன் (Vidisha Baliyan).

என்னுடய வெற்றிக் கைத்தட்டல்கள் எனக்கு கேட்கவில்லை என்றாலும்.. என்னுடைய சாதனையை உலகமே கேட்கச் செய்துவிட்டேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரியாக வெற்றி கண்டிருக்கிறார் விதிஷா. அதுவும் இந்தியாவில் முதன்முறையாக இந்த பட்டத்தைப் பெறும் முதல் பெண் என்ற வரலாற்று தடத்திலும் பெயர் பதித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தின் முசாஃபர் நகரைச் சேர்ந்த விதிஷா குழந்தைப் பருவத்திலிருந்தே காது கேட்காத குறைபாடோடு வளர்ந்துள்ளார். வலது காது 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்துள்ளது. இடது புறம் முற்றிலுமாக காது கேட்காது.

இந்நிகழ்ச்சி சவுத் ஆப்ரிக்காவில் போம்பெலா (Mbombela) என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த காது கேளாத அழகிகள் கலந்து கொண்டுள்ளனர். இறுதியாக 11 பேர் கடைசி சுற்றுக்குத் தேர்வானதில் இந்தியப் பெண்ணான விதிஷா ’உலகின் காது கேளாத அழகி 2019’ ( Miss Deaf World 2019) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கு அழகால் மட்டும் வெளிச்சம் கிடைக்கவில்லை. டென்னிஸ் வீராங்கனையாகவும் இருக்கிறார். உலக அளவில் பல போட்டிகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆக.. விதிஷாவிற்கு இந்த வெற்றி புதிதல்ல என்றே சொல்லலாம். அதேபோல் காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம்தான் விதிஷா இந்தியாவின் காது கேளாத அழகி என்ற பட்டம் பெற்றிருந்தார். பட்டத்தை தனதாக்கிய விதிஷா உரையாற்றியபோது “ இந்த நொடி..என்னுடைய கண்ணீரைத் தவிற வேறெந்த வார்த்தைகளும் சிறப்பானதாக இருக்க முடியாது. என்னுடைய கடின உழைப்பு, வலி, காலையில் சீக்கிரம் எழுவது, கடுமையான பயிற்சி இவை எதுவும் வீண் போகவில்லை. எல்லாவற்றிற்கும் இன்று வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் இந்தியாவின் முதல் பெண் என்கிற பெருமை மகிழ்ச்சியை இரெட்டிப்பாக்குகிறது. கடவுளுக்கு என்னுடைய நன்றிகள்” என்று பேசியுள்ளார்.

No comments:

Post a Comment