FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, July 19, 2019

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளி புதைத்து வைத்த செல்லாத ரூபாய் நோட்டுகள்

18.07.2019
விக்கிரவாண்டி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாத மாற்றுத் திறனாளி சேமித்து வைத்த, பழைய ரூபாய் நோட்டுகள், அவரது இறுதிச் சடங்கிற்கு பயன்படாமல் போனது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, ராதாபுரம் சாம்பசிவம் ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 52; காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவரது மனைவி அஞ்சாலாட்சி, 48.இவர்களுக்கு, 19 - 16 வயதில், இரு மகள்கள், 10 வயதில் மகன் உள்ளனர். ராஜாங்கத்தின், 78 வயது தாயும், உடன் வசித்து வந்தார். ராஜாங்கத்தின் தாயும், இரண்டாவது மகளும், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள்.அரசு வழங்கிய மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் கிடைத்த பணத்தை, ராஜாங்கம், மனைவிக்கு கூட தெரியாமல், சேமித்து வந்துள்ளார்.தனக்குள்ள குறைபாட்டால், வெளியுலக நடப்பு தெரியாமல் இருந்து வந்த ராஜாங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, படுத்த படுக்கையாய் இருந்தார். மத்திய அரசு அறிவித்த, பண மதிப்பிழப்பு குறித்தும், தெரியாமல் இருந்துள்ளார்.தன் உடல்நிலை மோசமடைவதை உணர்ந்த ராஜாங்கம், சேமித்த பணத்தை, வீட்டின் அருகில் பூமியில் புதைத்து வைத்துள்ள இடத்தை, மனைவியிடம் நேற்று முன்தினம் கூறியுள்ளார்.புதைத்து வைத்த பணத்தை எடுத்து பார்த்த மனைவி அதிர்ந்து போனார். அப்பணம் முழுவதும் பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 500 ரூபாயில், 41ம்; 1,000 ரூபாயில், ஒன்பது என, மொத்தம், 29 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது.அன்று இரவு, 7:00 மணியளவில் ராஜாங்கம் இறந்தார். ஆதரவுக்கரம் நீட்ட யாருமின்றி, கணவர் சேர்த்து வைத்த பணத்தால், ஒன்றும் செய்ய முடியாத நிலையில், அஞ்சாலாட்சி தவித்துள்ளார்.இதையறிந்த ஊராட்சி செயலர் புத்தன், ஈமச் சடங்கு நிதியாக, 2,000 ரூபாய் வழங்கினார். அக்கம் பக்கத்தினர் பணம் கொடுத்து உதவியதை தொடர்ந்து, ராஜாங்கத்தின் இறுதிச் சடங்கு நடந்தது.

No comments:

Post a Comment