FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, December 21, 2019

உ.பியில் கொடூரம்! காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் முன்னே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

09.12.2019
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் முன்னாலே, சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டில் இருந்த பதின் வயது சிறுமியை ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தந்தை வேலைக்காக வெளியே சென்று விட, காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியின் தாயார் மொட்டை மாடியில் இருந்துள்ளார். இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த சர்வேஷ் ராவத் என்பவர், வீட்டிற்குள் புகுந்து சிறுமியை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதற்கிடையே, சிறுமியின் தாய் இதைப்பார்த்து மகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், ராவத் அவரையும் அடித்து தள்ளிவிட்டுள்ளார். அவர், மகளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.

இதன்பின்னர் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், சர்வேஷ் மீது காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வேஷ் ராவத்(32). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் தற்போது, கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment