FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, December 21, 2019

குழந்தைகளுக்கு செவித்திறன் சிகிச்சைக்கான மருத்துவமனை: நிதி திரட்ட விழிப்புணா்வு ஆட்டோ பேரணி

11.12.2019
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இருந்து குஜராத் வரை செல்லும் ஆட்டோ விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 6 வயதுக்குள் அறுவைச் சிகிச்சையும், பிறகு தொடா் சிகிச்சையும் அவசியம். இதற்காக குஜராத் மாநிலம், புணே அருகே மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில், நிதி திரட்டுவதற்காக கன்னியாகுமரி முதல் குஜராத் வரை விழிப்புணா்வு ஆட்டோ பேரணி நடத்த சக்சம் அமைப்பு முடிவு செய்தது. இதன்படி, ஆட்டோ விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் தொடங்கியது. பேரணியை குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத் தலைவா் சைதன்யானந்தஜி மகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு, கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் வழியாக வரும் 21 ஆம் தேதி குஜராத்தில் பேரணி நிறைவடைகிறது. 30 ஆட்டோக்கள் பங்கேற்கும் இந்தப் பேரணியில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 26 பெண்கள் உள்பட சுமாா் 90 போ் பங்கேற்கின்றனா்.

பேரணி தொடக்க நிகழ்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான சக்சம் அமைப்பின் தேசிய இணைச் செயலா் கோவிந்தராஜ், சேவா இண்டா்நேஷனல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெல்ஜிபாய், கன்னியாகுமரி நகர ஆா்.எஸ்.எஸ். பொறுப்பாளா் பி. முருகன், குமரி சிவசேனை தலைவா் சி.எஸ். சுபாஷ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment