FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, December 20, 2020

பாகிஸ்தானில் இருந்து திரும்பி 5 ஆண்டுகளாக பெற்றோரை தேடும் இந்திய இளம்பெண் மராட்டியம் வந்து தேடுகிறார்

18.12.2020 மும்பை,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் கீதா (வயது 30). இவர், வாய் பேச முடியாத, காது கேளாதவர் ஆவார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, 10 வயது சிறுமியாக இருந்தபோது, பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரெயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தன்னந்தனியாக தவித்துவந்த அவரை, அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்து வளர்த்தது.

இந்தநிலையில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை இந்தியாவின் மகள் என சுஷ்மா சுவாராஜ் வர்ணித்தார். மேலும் அவரது குடும்பத்தை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்தார்.

தற்போது இந்தூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் கீதா இருக்கிறார்.

இந்தியாவுக்கு வந்து 5 ஆண்டுகளாக அவர் தனது பெற்றோரை தேடிவருகிறார். இதற்கிடையே பல தம்பதிகள் கீதாவின் பெற்றோர் என கூறி அணுகினர். ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியாதால் அவர்களை கீதா தனது பெற்றோராக ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் நம்பிக்கை குறையாமல் தனது குடும்பத்தை கண்டறியும் பாசப்போராட்டத்தில் கீதா இறங்கியுள்ளார்.

இந்தநிலையில் அவர் தன் வீட்டைப்பற்றி சொன்ன அடையாளங்களை வைத்து, மராட்டிய மாநிலம் நாந்தெட் நகருக்கு அவரை தொண்டு நிறுவனம் நேற்று முன்தினம் அழைத்துச் சென்றது. அங்கு பல இடங்களில் தேடியும் வீட்டையோ, பெற்றோரையே கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தாலும் தொடர்ந்து இங்கேயே தங்கி பெற்றோரை தடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.



No comments:

Post a Comment