FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, January 9, 2022

வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசு; செஸ் வீராங்கனை குமுறல்


ஜலந்தர்,
பஞ்சாபின் ஜலந்தர் நகரை சேர்ந்த செஸ் வீராங்கனை மாலிகா ஹண்டா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது டுவிட்டரில் ஹண்டா வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் மாநில அரசு தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

பஞ்சாபின் முன்னாள் விளையாட்டு துறை மந்திரி பண பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் உள்ளது. ஆனால், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு அது ரத்து செய்யப்பட்டது.

இதன்பின்பு, கடந்த டிசம்பர் 31ந்தேதி விளையாட்டு துறை மந்திரி பர்கத் சிங்கை சந்தித்தேன். அவர், காது கேளாதோர் விளையாட்டுக்கு, அரசு வேலை தரவோ அல்லது பரிசு எதுவும் அளிக்கவோ முடியாது. அதற்கான கொள்கை அரசிடம் எதுவும் இல்லை என கூறுகிறார்.

முன்னாள் விளையாட்டு துறை மந்திரி கூறியவற்றை பர்கத் சிங்கிடம் கூறினேன். ஆனால் அவர், நான் கூறவில்லை. முன்னாள் மந்திரி கூறியுள்ளார். அரசால் எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார்.

காங்கிரஸ் அரசில் என்னுடைய 5 ஆண்டு காலங்கள் வீணாகி விட்டன. என்னை அவர்கள் முட்டாளாக்கி விட்டனர். காது கேளாதோர் விளையாட்டை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என குமுறலுடன் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment