FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, February 7, 2022

காதுகேளாத வாய் பேச இயலாத மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை


04.02.2022
ஆசை பட பாணியில் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் நடந்துள்ளது இந்த சோக சம்பவம்.

கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த தம்பதி முகமது சலீம்- சோபியா. இவர்களுக்குப் பிறந்த மகன் பிறவியிலேயே வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாமலும் இருந்துள்ளார் . பல முயற்சிகள் செய்தும் இந்த குறையை குணப்படுத்த முடியவில்லை.

இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இப்படிப்பட்ட மகனை பார்த்துக்கொண்டிருக்க மனது இல்லாததால் மகனை கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் .

அதன்படி, முகமது சலீம் தனது மகனை பாலிதீன் கவரை எடுத்து, அதைத் தனது மகனின் முகத்தை முழுவதுமாக மூடி கட்டியிருக்கிறார். இதில் மூச்சுத்திணறி மகன் உயிரிழந்திருக்கிறார். அதன்பின்னர் தம்பதிகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வாய் பேச முடியாத காது கேளாத எத்தனையோ பேர் வாழ்ந்து வரும் போது தங்கள் மகன் அப்படி இருப்பது அந்தப் பெற்றோர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது கோவில்பதாகை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.




No comments:

Post a Comment