FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, October 16, 2024

தமிழகம் சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டையில் செயல்படும் காதுகேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 48 காதுகேளாத மாற்றுத் திறனாளி, 35 பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களும் படித்து வருகின்றனர். பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனித்து வந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த மாணவர்களையும் சேர்த்து கவனிக்குமாறு காதுகேளாத மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்த ஆசிரியர் காயத்ரிக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் 365 நாட்களும் விடுமுறை இல்லாமல் பணியாற்றி வரும் தனக்கு ஞாயிற்று கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரியும் ஆசிரியர் காயத்ரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனிக்க சிவகங்கையில் இருந்து ஆனந்தன் என்ற ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, கடந்த 2016ம் ஆண்டு முதல் 365 நாட்களும் விடுமுறையில்லாமல் மனுதாரர் பணியாற்றியுள்ளார். 365 நாட்களும் விடுமுறை இல்லாமல் யாரும் பணியாற்ற முடியாது என்பதால், அரசு விடுமுறை நாட்களிலாவது மனுதாரருக்கு விடுப்பு வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக்கப்படுவதைப் போல இதுபோன்ற சிறப்பு பள்ளிகளிலும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க கொள்கை முடிவெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி அக்டோபர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



No comments:

Post a Comment