FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Wednesday, October 16, 2024

சர்வதேச காதுகேளாதோர், இந்திய சைகை மொழி தின பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்



24.09.2024,திருவள்ளூர்: 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ச.சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரணியை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் 50க்கும் மேற்பட்ட காதுகேளாத மாற்றத்திறனாளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காதுகேளாதோர் சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சைகை மொழி என் கையில், சைகை மொழியை போற்றுவோம், சைகை மொழியே என் மொழி, என் கையே என் வாய், சர்வதேச காதுகேளாதோர் தினம் வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

முன்னதாக சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காதுகேளாத சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மலர்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர் ஆயுஸ் குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment