FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, May 19, 2025

மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் தவறான தகவல் என எஸ்.பி., உறுதி

18.05.2025
ராம்நகர்: ''உயிரிழந்த மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை,'' என, ராம்நகர் எஸ்.பி., சீனிவாஸ் கவுடா உறுதி செய்துள்ளார்.

ராம்நகர் பிடதி அருகே பத்ராபுரா கிராமத்தில் உள்ள பழங்குடியினர் காலனியில் வசித்தவர் குஷி, 14. காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த 12ம் தேதி பத்ராபுரா கிராமம் வழியாக செல்லும், ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள குழியில் இறந்து கிடந்தார்.

அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. குஷியை யாரோ பலாத்காரம் செய்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இதனால் சிறுமியின் உடலில் இருந்து 32 மாதிரிகள் எடுக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

துணை முதல்வர் சிவகுமார், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி ஆகியோர், குஷியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் ராம்நகர் மாவட்ட எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று அளித்த பேட்டி:

பத்ராபுரா கிராமத்தில் உயிரிழந்த சிறுமி குஷி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று, அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். தற்போது தடய அறிவியல் ஆய்வக அறிக்கை, எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியின் தலையின் காயத்திற்கான அறிகுறி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரியவரும். சிறுமி இறந்தது பற்றி சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல் பரப்புகின்றனர். அவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கில் 10 பேரிடம் விசாரித்தோம். யாரையும் கைது செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment