FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, January 3, 2016

காய்ச்சலால் பேசும் திறன் இழந்த இளம் பெண்ணுக்கு மீண்டும் பேச்சு திறன் வந்தது எப்படி?

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிந்தகுடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் முத்துலெட்சுமி தம்பதி மகள் மகள் துர்கா (23). இவரது கணவர் பிரபாகரன். 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த அக்டோபர் 13ம் தேதி துர்காவிற்கு காய்ச்சலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு துர்காவிற்கு திடீர் என தலை மட்டும் தொடர்ந்து ஆடத் தொடங்கியது. டாக்டர்கள் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் தலை ஆடுவதாக கூறினர். இந்நிலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த துர்காவிற்கு திடீர் என பேச்சுத்திறன் பறிபோனது.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததாலும், தவறான சிகிச்சையால்தான் இந்நிலை ஏற்பட்டதாக கூறி அவரை அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தலை ஆடுவது நின்றது.

ஆனால் பேச்சுதிறன் மட்டும் வரவில்லை. இதையடுத்து துர்கா வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு பேச்சுத்திறன் வருவதற்கு கோயில், கோயிலாக குடும்பத்தினர் சென்று வந்தனர்.கடந்த 28ம் தேதி துர்கா வீட்டின் அருகே நடந்து சென்றபோது கல்லில் தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அப்போது வலியை தாங்க முடியாமல் துர்கா அம்மா என அலறினார். அப்போது முதல் துர்காவிற்கு பேச்சுத் திறன் மீண்டும் வந்தது. இதனையடுத்து துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் துர்காவிற்கு 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேச்சுத் திறன் கிடைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துர்கா கூறும்போது, ‘இரண்டரை மாதமாக வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி போல இருந்தேன். என் குழந்தை அம்மா, அம்மா என மழலை மொழியில் பேசும். அதற்கு பதில் சொல்ல முடியாமல் நான் தவித்தேன். இதற்கு ஆண்டவன் நல்ல முடிவை தந்தார். டாக்டர்கள் கைவிட்டபோதும் கடவுள் எனக்கு அருள் புரிந்தார்’என்றார்.துர்காவுக்கு திடீரென பேசும் திறன் வந்தது எப்படி என்பது குறித்து முசிறி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், காது, மூக்கு, தொண்டை நிபுணருமான செல்வகுமாரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘அளவுக்கு அதிகமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மனோ ரீதியாக பயந்து போனதால் அவருக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம். அதற்கு உரிய பயிற்சி அளித்தால் மீண்டும் பேச்சு திறன் வந்து விடும். இது தவிர பேச முடியாமல் போன ஒருவர் தலையில் அடிபட்டதால் மீண்டும் தானாக பேச்சுவந்தது என்பது மருத்துவ ரீதியாக 99 சதவீதம் சாத்தியம் இல்லாதது.இது குறித்து சரியான தகவல்களை சொல்ல வேண்டுமானால் அவரது மருத்துவ சிகிச்சை பற்றிய ரிப்போர்ட் பார்த்து சொன்னால்தான் அது சரியாக இருக்கும்’ என்றார்.

No comments:

Post a Comment