FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, January 7, 2016

அனாதையாக இருந்தால்தான் உதவித்தொகையா? கருணைக்கொலை செய்துவிடுங்கள்


06.01.2016, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காத்திருப்போர் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் ஜலீல்முகைதீன், பேராவூரணி லாரன்ஸ்சேவியர், மதுக்கூர் பார்த்தசாரதி, திருவோணம் செந்தில்குமார், பட்டுக்கோட்டை ராவுத்தர், அதிராம்பட்டினம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் பஹாத்முகம்மது, மாவட்ட பொருளாளர் ஜமால்முகம்மது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், அனாதையாக இருந்தால் தான் மாத உதவித்தொகை வழங்கப்படும் என்ற விதிமுறையை நீக்க வேண்டும், அடையாள சான்று வழங்கப்பட்டுள்ள மாற்றத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் கோட்டாட்சியர் தலைமையில் தனியாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கே வந்து மாற்றுத்திறனாளிகளிடம் சார் ஆட்சியர் ராஜசேகர் மனுக்களை பெற்றார். அப்போது அவரிடம் மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நாங்கள் பலமுறை கொடுத்த மனுக்களை வாங்கிச் சென்ற அதிகாரிகள் இதுவரை விசாரணையே செய்யவில்லை. 100 பேருக்கு மேல் மனு கொடுத்தும் 10 பேருக்கு கூட உதவித்தொகை கொடுக்கவில்லை. எங்களிடம் மனு வாங்கும் போதே உங்களுக்கு கிடைக்காது என்று சொல்லிவிட்டால் நாங்கள் அலைய வேண்டியதில்லை. 10 முறை அலைய வேண்டியதிருக்கு. இந்த மாதிரி நிலைமையில் அலைய முடியுமா என்று குமுறினர்.

பேராவூரணி ஒன்றிய செயலாளர் லாரன்ஸ்சேவியர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை கிடைக்க வேண்டும். எங்களுக்கு உதவித்தொகை தந்து வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள். இல்லையென்றால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்றார்.

No comments:

Post a Comment