FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, January 7, 2016

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு 375 பணிகள்


தமிழ்நாடு மின்சார வாரியத்தில், என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 375 பணிகள்
உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:–

தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக டி.என்.இ.பி என்றழைக்கப்படும், இந்த துறையில் தற்போது உதவி பொறியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 375 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவற்றில் மின்னியல் பிரிவில் 300 இடங்களும், சிவில் பிரிவில் 50 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 25 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 1–7–2015 அன்று 18 வயது பூர்த்தியானவர்களாகவும், 30 வயதிக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. பிரிவினர் விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் இல்லை.

கல்வித்தகுதி:
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொடர்பு, மெக்கானிக்கல், புரொடெக்சன், இண்டஸ்ட்ரியல், மேனுபக்சரிங், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி., விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமாக 250 ரூபாயும் பி.சி., எம்.பி.சி., மற்றும் ஓ.சி பிரிவினர் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். கட்டணத்தை கனரா வங்கி அல்லது இந்தியன் வங்கி மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும். எனவே முன்னதாகவே ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி நாள் : 11–1–2016

கட்டணம் செலுத்த இறுதி நாள் : 13–1–2016

தேர்வு நடைபெறும் நாள் : 30–1–2016

விண்ணப்பிக்கவும், இதுபற்றிய விரிவான விவரங்களை அறிந்துகொள்ளவும் www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment