FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, January 7, 2016

இந்திய ரெயில்வே துறையில் 18,252 பணியிடங்கள்

இந்திய ரெயில்வே துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 ஆயிரத்து 252 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தென்னக ரெயில்வே மண்டலத்தில் மட்டும் 1464 பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

ரெயில்வே ஆட்தேர்வு வாரியம் ரெயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு (ஆர்.ஆர்.பி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு இந்தியாவின் பல்வேறு ரெயில்வே மண்டலங்களிலும் 18 ஆயிரத்து 252 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் கூட்ஸ் கார்டு பணிக்கு 7 ஆயிரத்து 591 இடங்களும், அசிஸ்டன்ட் ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு 5 ஆயிரத்து 942 பணியிடங்களும் உள்ளன.

இதேபோல கமர்சியல் அப்ரண்டிஸ் பணிக்கு 703 பேரும், டிராபிக் அப்ரண்டிஸ் பணிக்கு 1,645 பேரும், என்கொயரி கம் ரிசர்வேசன் கிளார்க் பணிக்கு 127 பேரும், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 1205 பேரும், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 869 பேரும், டிராபிக் அசிஸ்டன்ட் பணிக்கு 166 பேரும், சீனியர் டைம் கீப்பர் பணிக்கு 4 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களில் தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட சென்னையில் 976 பணியிடங்களும், திருவனந்தபுரத்தில் 488 பணியிடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1–1–2016 தேதியில் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. டைப்பிஸ்ட் மற்றும் டைம் கீப்பர் பணிகளுக்கு பட்டப்படிப்புடன் தட்டச்சு தகுதியும் கோரப்பட்டு உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

கணினி தேர்வு (சி.பி.டி.), தட்டச்சுத் திறன் தேர்வு, ஆப்டிடியூடு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதை நெட்பேங்கிங் மூலமோ அல்லது ஸ்டேட் வங்கி கிளைகளில் செலான் மூலமாகவோ செலுத்தலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், சிறுபான்மையினர், மூன்றாம்பாலித்தவர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அந்தந்த மண்டலத்திற்கான ரெயில்வே ஆட்தேர்வு வாரிய இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தமிழகம் மற்றும் கேரளா பகுதியை உள்ளடக்கிய தெற்கு மண்டல விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.1.2016–ந் தேதியாகும்.

விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment