FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, August 3, 2018

பிஹார் காது கேளாத, வாய்பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது முதல் 17வயது வரையிலான சிறுமிகள் பலாத்காரம்; தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை: அடையாளங்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை

02.08.2018
பிஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் காப்பகம் ஒன்றில் 34 மாற்றுத்திறனாளி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கும் பிஹார் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிகளின் புகைப்படம், பேட்டி உள்ளிட்ட எந்தவிதமான தகவலும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஹார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், சேவாக் சங்கல்ப் இவான் விகாஷ் சமிதி சார்பில் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது முதல் 17வயது வரையிலான சிறுமிகள் தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு இரவு உணவில் மயக்க மருந்து கொடுத்து அந்தக் காப்பகம் நடத்துபவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தக் காப்பகம் நடத்துவோரும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் காப்பகத்தில் உள்ள 34 சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தக் காப்பகத்தின் உரிமையாளர்கள், ஊழியர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கிடையே பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காப்பகத்தில் இருந்த 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இன்று இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் விசாரணைக்கு எடுத்தனர். மாற்றுத்திறனாளி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிஹார் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் சிறுமிகளிடம் எந்தவிதமான பேட்டி வெளியிடுதல், புகைப்படம் பதிவிடுவது, சிறுமிகளின் முகத்தை மறைத்து புகைப்படம் வெளியிடுவது போன்றவற்றை செய்யத் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் உதவியை உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. வழக்கை வரும் 7-ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment