FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, August 21, 2018

தென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது?

21.08.2018
தென் கொரியாவின் தலைநகரம் சோலில் காதுகோளாத ஓட்டுநர்கள் வாடகை கார் சேவையை முதல் முதலாக தொடங்கியுள்ளனர்.

காது கேட்கின்ற திறனில் குறைபாடு உள்ள கார் ஓட்டுநர்களை வாடகைக்கு அமர்த்த உள்ளூரில் இருக்கின்ற தயக்கத்தை குறைப்பதற்கு உதவிய புதிய மென்பொருள் இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது.

இந்த வாரத்தில் காது கேளாத இருவர் வாடகை கார் மூலம் பயணிகளுக்கு சேவையாற்ற தொடங்கியுள்ளதாக கொரியன் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் மூலம் இந்த ஓட்டுநர்கள் உதவி பெறுகின்றனர்.

இந்த மென்பொருள் செயல்படுவது பற்றி விளக்கும்போது, இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன. இவை 'கோயோஹான் டேக்ஸி' அல்லது 'சைலன்ட் டேக்ஸி' மென்பொருளோடு (App) இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் 
முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன.
பேசுவதை எழுத்து முறையில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. பயணியர் சென்றடையும் முனையம் மற்றும் இறக்கிவிட விரும்பும் இடம், கட்டணம் செலுத்தும் முறை ஆகிய வசதிகளை கொண்டுள்ளதால் பயணிகளுக்கு இது மிகவும் எளிதாக அமைந்துவிடுகிறது.
கணினி பொறியிலாளர் பட்டம் வென்ற சொங் மின்-பியோவின் தலைமையில் சோல் நகரிலுள்ள மாணவர்கள் குழு ஒன்றால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்க விரும்பியதாக சொங், கொரிய டைம்ஸிடம் கூறியுள்ளார்.

நோட்டையும், பேனாவையும் எடுத்து, குறித்து கொள்ள முயலும் அந்த தருணத்திலேயே கொரியர்கள் அந்த வாடகை காரை விட்டு அகன்று விடுவார்கள் என்பதால் இந்த மென்பொருளை (ஆப்) கண்டுபிடித்த்தாக அவர் குறிப்பிடுகிறார்.

காது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை
வழங்க விரும்பியதாக சொங் தெரிவிக்கிறார்.
2015ம் ஆண்டு மே மாதம் வாடகை கார் சேவை நிறுவனமான உபேர் காது கேளாதோர் விழிப்புணர்வை உருவாக்க எடுத்த முயற்சியால் தூண்டுதல் பெற்றதாக சொங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வசதியால் காது கோளாதோர் அதிகம் பேர் இந்த தொழிலை செய்ய முன்வருவர் என்று கோயக்டஸ் நிறுவனம் நம்புகிறது.

தென் கொரியாவில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் காது கோளாதோர் என்று சுகாதார மற்றம் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment