FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, August 12, 2018

காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவிகளின் 94 மெழுகுவத்தி அஞ்சலி!


09.08.2018, சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவிகள், 94 மெழுகுவத்திகளை ஏற்றி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, 94 வயதில் மரணமடைந்தார். அவரின் உடல், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாகக் கருணாநிதியின் உடலுக்கு ராஜாஜி அரங்கில் ஏராளமானவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன்காரணமாகத் தமிழகம் முழுவதும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

வழக்கம்போல இன்று கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின. சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான லிட்டில் பிளவர் காதுகேளாதோர் கான்வென்ட்டில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸ்லின் தலைமையில் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மெழுகுவத்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் 94 மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டன. அதாவது, 94 என்று எழுதப்பட்டு அதில் 94 மெழுகுவத்திகள் ஏற்றி ஆசிரியைகளும் மாணவ, மாணவிகளும் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கருணாநிதி மரணம் குறித்து வெளியான செய்திகளைச் சேகரித்த மாணவிகள் அதற்கு முன்புதான் மெழுகுவத்திகளை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment