FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, December 17, 2018

அடடே...இப்படியும் ஒரு உணவகமா? காதுகேளாத & வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க புதிய முயற்சி!

17.12.2018
ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள உணவகம் ஒன்று, மாற்றுத்திறனாளிகளை மட்டும் பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

The Daily Grinds என்ற பெயரில் திவாகர் அரோரா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் சமையல்காரர், சுத்தம்செய்பவர், கணக்குபார்ப்பவர் என அனைத்து வேலையாட்களும் மாற்றுத்திறனாளிகள் தான். அதிலும் பெரும்பாலானவர்கள் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்.

இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் தனித்துவமான முறையில் வரவேற்று, திருப்திகரமான உணவு வழங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான உணவை மெனு கார்டில் தொட்டு காண்பித்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்று பல வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கூடிய இந்த உணவகத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். மேலும், ஒரே வகையான உணவுப்பொருட்களை தினமும் வழங்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தன் உணவுப்பட்டியலை மாற்றிக்கொள்வது இந்த உணவகத்தின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போல நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த உணவகத்தை ஆரம்பித்ததாகவும் இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற உணவகத்தை தொடங்கவேண்டும் என்பதே தனது லட்சியம் என தன் கனவுகளை பகிர்ந்துகொண்டார் உரிமையாளர் அரோரா.

No comments:

Post a Comment