FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, December 18, 2018

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு பேரணி

17.12.2018
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மருத்துவ மாணவர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:-

இந்தியாவில் 50 லட்சம் பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்களாகவும், 19 லட்சம் பேர் பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்களாவும் உள்ளனர். பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு 3-வது நாளில் செவிப்புலன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் செவித்திறன் குறைபாடு மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் திறனை மேம்படுத்த அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment