FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, December 10, 2018

சாதனைக்கு ஏது தடை...


10.12.2018
சாதனையாளர்கள் வாழ்வதும், வீழ்வதும், காலத்தின் கையில் என்பது, மிகையல்ல. சாதனையாளர்களுக்கான அங்கீகாரம் என்பது, போட்டி நிறைந்த உலகில், அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதுவும், மாற்றுத்திறனாளி ஒருவர் சாதித்து விட்டால், அவரை கொண்டாடுவதில் கூட, இந்த சமுதாயம், ஓர வஞ்சனை காட்டுகிறது.அந்த வரிசையில், செவித்திறன் இழந்தும், தேசிய கிரிக்கெட்டில் தனி ஆவர்த்தனம் புரிந்து, திரும்பியிருக்கிற சாய் ஆகாஷ் என்ற வீரரின் நிலை இருக்கிறது.ஹரியானா மாநிலம், குர்கானில், பி.சி.சி.ஐ., தேசிய காதுகோளாதோர் அசோசியேஷன் மற்றும் மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, இன்டர்நேஷனல் டி - 20 கிரிக்கெட் போட்டியை, நவ., 19 -, 30 வரை நடத்தின; பல நாடுகளின் அணிகள் பங்கேற்றன.இந்திய அணியில், சென்னை சேர்ந்த சாய்ஆகாஷ், கன்னியாகுமரியை சேர்ந்த பிரதீப் ஆகிய, இருவர் இடம் பிடித்தனர். நிதி நெருக்கடியால், நாகையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு வாய்ப்பு பறிபோனது. இதில், சாய் ஆகாஷின் திறமை, அவை ஒரு மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை நிரூபித்தது.அவர், ஆஸி., அணிக்கு எதிராக அரைசதம், (54 ரன்), பாக்., அணிக்கு எதிராக, 28 ரன், வங்கதேசத்துடன், 32 ரன், இங்கிலாந்துடன், 16 ரன் எடுத்தார். இலங்கையுடனான இறுதிபோட்டியில், இலக் கை விரட்டிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து 'பெவிலியன்' திரும்ப, சாய் ஆகாஷ், நிலைத்து நின்று, 48 ரன் எடுத்தார்; இருப்பினும், இந்திய அணி தோல்வியடைந்தது.சாய் ஆகாஷ், தான் பங்கேற்ற, எட்டு போட்டியில், 6 சிக்சர், 14 பவுண்டரி, ஒரு அரைசதம் எடுத்து, 178 ரன் எடுத்து, இந்திய அணியின் 'டாப்' ஸ்கோர் பட்டியலில், முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். கிரிக்கெட் அசோசியேஷன், அணியின் பாராட்டு பெற்ற இவருக்கு, மாநில அரசின் சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. ஊக்கப்படுத்த விரும்புவோர், அவரது பயிற்சியாளரை, 98947 25497 என்ற எண்ணில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment