FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, April 26, 2025

“அனுதாபம், ‘ஹீரோ’ இமேஜ் வேண்டாம்!” - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத் திறனாளி கதை இது!



24.04.2025 
பார்வை மாற்றுத் திறனாளிகள் தினம் தினம் போராடிப் போராடிதான் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு ஓர் அரசாங்க வேலை, நல்ல சம்பளம் என்பதெல்லாம் எட்டிப்பிடிக்க முடியாத கனவுதான். இத்தகையை சூழலில், ஒன்பதாம் வகுப்பில் தனது பார்வையை இழந்த மனு கார்க் (23) என்ற இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அசாத்திய சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் 23 வயதான மனு கார்க். தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்துள்ளார். சமீபத்தில் முடிவுகள் வெளியான யுபிஎஸ்சி தேர்வில், தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் 91-வது இடத்தைப் பெற்றார். இந்து கல்லூரியில் இளங்கலை படித்த அவர், ஜேஎன்யூ-வில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சிறு வயதிலிருந்தே , சமூக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. இது குறித்து அவர் பகிர்ந்தவை: “அரசு ஊழியர்கள் எவ்வாறு சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள் என்பது பற்றிய கதைகளை நான் சிறு வயதிலேயே கேட்பேன். அது எனக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. சிறு வயதில் இருந்தே நாட்டு நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் சார்ந்த சம்பவங்களை அறிந்து கொள்வதில் நான் எட்டாம் வகுப்பில் இருந்தபோது, ​​பார்வைக் குறைபாட்டின் அறிகுறிகள் தொடங்கின. வகுப்பறையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தாலும், கரும்பலகையை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏராளமான மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. பிறகு, விழித்திரையில் சிதைவை ஏற்படுத்தும் ஒரு அரிய மரபணு கோளாறு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

காலப்போக்கில், இது முழுமையான பார்வை இழப்புக்கு வழிவகுத்தது. தொழில்நுட்பங்களை எனக்கு நிறைய வழிகளில் உதவியாக இருந்தது. தேர்வுக்கு தயாராவதில் சற்று சிரமங்கள் இருந்தாலும் கூட, நான் அதை சரியான முறையில் கையாண்டேன். ஆடியோ வடிவில் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.

என்னதான் நன்றாக படித்திருந்தாலும், தேர்வு எழுதுவது மிக முக்கியமான ஒரு விஷயம். நன்றாக எழுதும் ஒருவரைக் கண்டுபிடிப்பது சவாலானது. அவர்கள் நாங்கள் கூறும் பதில்களைப் புரிந்துகொண்டு அவற்றை நாம் சொல்வது போல் சரியாக எழுத வேண்டும். முதலில் 2023-இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதினேன். ஆனால், தேர்ச்சி பெறமுடியவில்லை. எனது அம்மா மிகவும் உதவிகரமாக இருந்தார்.

எனது இலக்கில் மிக கவனமாக இருந்தேன். படிப்பதில் மிகவும் கவனம் செலுத்தினேன். ஒரு நாளுக்கான பாடத்திட்டத்தை முடிக்காமல் எழுந்திருக்க மாட்டேன். சில சமயங்களில் தேவைப்பட்டால் இரவு வெகுநேரம் வரை படிப்பேன். மற்ற சமயங்களில் பாடல் கேட்பது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவேன்.

நான் ஐ.ஏ.எஸ்.-ல் சேர்ந்தால், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் அனுதாபத்தையோ அல்லது ஹீரோக்களைப் போல நடத்தப்படுவதையோ விரும்பவில்லை. எங்களுக்கான சம வாய்ப்பு வழங்கப்பட்டாலே போதுமானது” என்றார்.


No comments:

Post a Comment