FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, December 17, 2013

அனைத்துத் துறைகளிலும் சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்

16.12.2013, கடலூர்,

மாற்றுத்திறனாளிகள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர் என்றார் மாவட்டக் கல்வி அலுவலர் மல்லிகா.

தமிழ்நாடு பார்வை - மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கடலூர் பார்வையற்றோர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கடலூர், விழுப்புரம் கிளை மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கடலூர் கிளை துணைத் தலைவர் பாரதிராஜா வரவேற்றார். கடலூர் கல்வி மாவட்ட அலுவலர் மல்லிகா, விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், விழுப்புரம் ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் பாபு செல்லத்துரை, ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் பாஸ்டினா அந்தோணி செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மாவட்டக் கல்வி அலுவலர் மல்லிகா பேசியதாவது: மாணவர்களை ஊக்குவிக்கும் போது மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளைத் தான் எடுத்துக் கூறுவோம். மாற்றுத்திறனாளிகள் இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகின்றனர். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தனி சட்டம் இயற்றி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பல வெற்றிகள் பெற வேண்டும் என்றார்.

10, 12-ம் வகுப்பு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Thanks to

No comments:

Post a Comment