FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, December 4, 2013

உரிமைகள் மறுக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றத்தை அணுகலாம் மாவட்ட நீதிபதி அறிவுறுத்தல்


04.12.2013, திருச்சி, :
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்காக நீதிமன்றத்தை அணுகலாம் என்று திருச்சி மாவட்ட நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்துப் பேசுகை யில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான நீதிபதி வேல்முருகன் தலைமை வகித்து பேசுகையில், ‘அனைவரும் மாற்றுத்திறனாளிகளை சமமாக கருத வேண்டும். அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட தவறினால் ஏற்பட்டது இல்லை. 6 முதல் 12 வயது வரையுள்ள அனைவருக்கும் கட்டாய கல்வி என அரசு அறிவித்துள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். மாற்றுத்திறனாளிகளை பிரித்து பார்க் கக் கூடாது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் சமமாக போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகலாம். பொருளாதார சூழல் இல்லை என்றாலும், இவர்களுக்கு உதவிட சட்ட உதவி மையம் உள்ளது. அனைத்து மாநகர் மற்றும் தாலுகாக்களில் மாவட்ட சட்டப் பணிகள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என் றார்.
விழாவில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயலாளர் நீதிபதி பார்த்தசாரதி, நிர்வாக முதன்மை அலுவலர் தனபால், விமானப் படை அதிகாரி தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பிஷப் ஹீபர், ஜமால் முகமது, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த என்சிசி மற்றும் மாணவர் படையினர் பங்கேற்ற பேரணியை நீதிபதி வேல்முருகன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இந்த பேரணி புத்தூர் முக்கிய சாலைகள் வழியாக பிஷப் ஹீபர் கல்லூரியை மீண்டும் சென்றடைந்தது.

Thanks to

No comments:

Post a Comment