FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, December 4, 2013

உரிமைகள் மறுக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகள் நீதிமன்றத்தை அணுகலாம் மாவட்ட நீதிபதி அறிவுறுத்தல்


04.12.2013, திருச்சி, :
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்காக நீதிமன்றத்தை அணுகலாம் என்று திருச்சி மாவட்ட நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்துப் பேசுகை யில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான நீதிபதி வேல்முருகன் தலைமை வகித்து பேசுகையில், ‘அனைவரும் மாற்றுத்திறனாளிகளை சமமாக கருத வேண்டும். அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட தவறினால் ஏற்பட்டது இல்லை. 6 முதல் 12 வயது வரையுள்ள அனைவருக்கும் கட்டாய கல்வி என அரசு அறிவித்துள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். மாற்றுத்திறனாளிகளை பிரித்து பார்க் கக் கூடாது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் சமமாக போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தை அணுகலாம். பொருளாதார சூழல் இல்லை என்றாலும், இவர்களுக்கு உதவிட சட்ட உதவி மையம் உள்ளது. அனைத்து மாநகர் மற்றும் தாலுகாக்களில் மாவட்ட சட்டப் பணிகள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என் றார்.
விழாவில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயலாளர் நீதிபதி பார்த்தசாரதி, நிர்வாக முதன்மை அலுவலர் தனபால், விமானப் படை அதிகாரி தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பிஷப் ஹீபர், ஜமால் முகமது, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த என்சிசி மற்றும் மாணவர் படையினர் பங்கேற்ற பேரணியை நீதிபதி வேல்முருகன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இந்த பேரணி புத்தூர் முக்கிய சாலைகள் வழியாக பிஷப் ஹீபர் கல்லூரியை மீண்டும் சென்றடைந்தது.

Thanks to

No comments:

Post a Comment