FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, December 30, 2013

நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
“வெண்மணி இல்லம், K.அனந்தநம்பியார் நகர்,
கரூர் பைபாஸ் ரோடு, திருச்சி-2.



நாடு தழுவிய கோரிக்கை முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 08.01.2014 புதன் கிழமை காலை 10.00 மணி
இடம்: BSNL  அலுவலகம், கண்டோண்மெண்ட், திருச்சி-1

அன்பிற்குரியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்.

காதுகேளாத வாய்பேசமுடியாதவர்கள் தகவல் பரிமாற்றம் – அவர்களின் பேசும் மொழியே SMS தான். SMS மூலம் தான் பல்வேறு துறைகள், சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் காதுகேளாதவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். Black out Days எனப்படும் நாட்களில் SMS கட்டணங்கள் சலுகை இல்லாமல் எல்லோருக்கும் ரூ.1/-என ஆக்குவது இவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. இவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. சமூக செயல்பாடு சுருங்கிவிடுகிறது. வேறு மாற்று இல்லாத காதுகேளாதோரின் இந்த பாதிப்பை உணர்ந்து UNCRPD எனப்படுகிற ஐக்கிய நாடுகள் சபையின் கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுள்ளது. இந்த விதிகளின்படி நமக்குரிய தகவல் தொழில்நுட்ப வசதிகளை உரிமைகளின் அடிப்படையில் இலவசமாக அளிக்க வேண்டியது அரசுக்கு கட்டாயமாகும்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும், அதன் தேசிய சங்கமான ஊனமுற்றோருக்கான தேசிய மேடையும் மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் முறையிட்டும் இதுவரை எந்தப் பலனும் இல்லை.
 

மத்திய அரசே!
  1. பண்டிகை, சிறப்பு நாட்களில் கூடுதல் கட்டணம் ரத்து செய்தும்.
  2. SMS க்கு சிறப்பு சலுகையில் அனைத்து நாட்களிலும் காதுகேளாதோர்க்கு வழங்குமாறும்.
  3. 3G வீடியோ சாட் இலவசமாக வழங்குமாறும்.
  4. மத்திய, மாநில அரசுகளே தலையிட்டு தீர்வு கண்டிடு என்றும்.
  5. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற வெளி மாநிலங்களுக்கு SMS அனுப்புவதில் சலுகை வழங்குக.
  6. SMS அனுப்பும்போது கால தாமதமின்றி உடனடியாக SMS கிடைக்கும்படி செய்யவேண்டும்.
  7. INTERNET க்கு சிறப்பு தள்ளுபடி சலுகையில் காதுகேளாதோர்க்கு வழங்கு.
என கோருகிறோம்.
தலைமை: R.ரவி (மாவட்ட தலைவர்) TARATDAC
சிறப்புரை: V.V.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) TARATDAC
N.ரமேஷ்பாபு (தலைவர்), M.சிவகுமார் (செயலாளர்), C.புஷ்பநாதன்(பொருளாளர்)
(திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம்- TDWAD)

சரவணன் – G.நெடுஞ்செழியன் – ரமேஷ் – அப்துல்சலாம் – கலியபெருமாள் – S.ஞானசேகர் – S.கோவிந்தராஜன் – ஜெயராமன் – சித்ரா மற்றும் பலர்.
இவண்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) மற்றும்

திருச்சிராப்பள்ளி மாவட்ட காதுகேளாதோர் நல முன்னேற்ற சங்கம் (TDWAD)
CELL: 9443179508,   SMS: 8754896891, 7373383825, 9489559215

No comments:

Post a Comment