FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, December 26, 2013

எட்டு ஆண்டுகளாய் ஏமாந்த மாற்றுத்திறனாளிகள்

26.12.2013, சென்னை:
பஸ்களில் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, எட்டு ஆண்டுக்கு முன், உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், அதை போக்குவரத்து கழகங்கள், பின்பற்றாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அரசு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என, போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி அளித்தும், சுமை கட்டணம் வசூலிப்பதை, நடத்துனர்கள் கட்டாயமாக்கி வருகின்றனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலர், நம்புராஜன் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிக்கு, சுமை கட்டணம் வசூலிக்கக் கூடாது என, 2005ம் ஆண்டு, டிச., 29ம் தேதி, அப்போது போக்குவரத்து துறை செயலராக இருந்த சண்முகம், அனைத்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இருந்தும், எட்டு ஆண்டுகளாக, கழகங்கள் இதை பின்பற்றாமல் இருந்துள்ளன. இந்த உத்தரவு விவரத்தை, மாற்றுத் திறனாளி பிரதிநிதிகளிடம், நேற்று தான் போக்குவரத்து துறை அதிகாரிகள் அளித்துள்ளனர். உத்தரவு விவரத்தை, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு தெரிவிப்பதுடன், பஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகையாகவும் வைப்பதற்கு, போக்குவரத்து மற்றும் மாற்றுத் திறனாளி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to

No comments:

Post a Comment