FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Sunday, October 19, 2014

மாற்றுத்திறனாளிகளுக்குதையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

17.10.2014, சேலம் :
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 54 பேருக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கான நேர்காணல் நடந்தது.சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மத்திய, மாநில அரசு வழங்கும் நலத்திட்ட உதவி, ஊனத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று சக்கர சைக்கிள், டூ வீலர், செயற்கை கால், காதொலி கருவி, இரும்பு ஸ்டிக், தையல் இயந்திரம், உதவித்தொகை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், 2014ம் ஆண்டுக்கு, 80 தையல் இயந்திரங்கள் வந்தன. அவற்றில், முதல் கட்டமாக கொடுத்ததுபோக, 54 இயந்திரம் இருந்தது.அதையடுத்து, 120 பேருக்கு நேர்காணலுக்கான கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று, மாற்றுத்திறனாளி அலுவலகத்தில், தையல் பயிற்சி முடித்தவர்கள், தங்களுடைய சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையுடன் வந்து கலந்து கொண்டனர். தையல் இயந்திரத்தை சரியான முறையில் இயக்குகிறார்களா என்பது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்கமணி, அதிகாரிகள், சேகர், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின், அவர்கள் தைத்த துணிகள் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓரிரு வாரத்தில், தகுதியானோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment