FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Friday, October 24, 2014

போலியோவை ஒழிக்க போராடி வரும்ஆஸ்திரேலிய மாற்றுத்திறனாளி பெண்

24.10.2014, ஆத்தூர் :
போலியோவால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண், போலியோவை ஒழிக்க, உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, கெயின்ஸ் சன்ரைஸ் பகுதியை சேர்ந்தவர் சுஷேன்னேரியா, 71. அவர், போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், போலியோ நோயை கட்டுப்படுத்த, தனது சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சென்று, ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நன்கொடை வழங்கி வருகிறார்.ரோட்டரி சங்க விருந்தில் பங்கேற்று, அவருடன் விருந்து சாப்பிடுவோரிடம், 200 ரூபாய் வசூல் செய்து, உணவுக்கு, 50 ரூபாய் போக, மீதம், 150 ரூபாயை வாங்கிக் கொண்டு, அத்தொகையை, போலியோ ஒழிப்புக்கு உதவித் தொகையாக வழங்கி வருகிறார்.நேற்று, ஆத்தூர், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகத்தில், "போலியோவை ஒழிக்க எங்களுடன் சாப்பிட வாருங்கள்' என்ற விழிப்புணர்வு விழா நடந்தது.விழாவில் கலந்து கொண்டு சுஷேன்னேரியா பேசியதாவது:சிறு வயதில், போலியோ நோய் ஏற்பட்டால், மாற்றுத் திறனாளியாகவும், உடல் பலவீனமான நிலை ஏற்படுகிறது. போலியோ நோயால், நானும் சிறு வயதில் பாதிக்கப்பட்டேன். என்னை போல், மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, சொந்த செலவில், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, நன்கொடை வழங்கி வருகிறேன்.போலியோ நோய், உலகளவில் கட்டுப்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் இல்லாதவகையில், எதிர் கால சந்ததியினர் உருவாக்குவதே என் வாழ்நாள் லட்சியம்.இவ்வாறு பேசினார்.விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் பாலசுப்ரமணியம், மாவட்ட தலைவர் நிர்மல்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment