FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, October 19, 2014

ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்: மாற்றுத் திறனாளி மாணவர்

16 October 2014,
ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் அதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே காரணம் என்று கூறுகிறார் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கைகள் இல்லாத எம்.சையத் காதர் (21).

இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் பேசுகையில் அப்பா முகமது யூசுப் சர்க்கஸ் குழுவில் பணிபுரிகிறார் நிரந்தர வருவாய் இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக தனது தாய் ஆசியா பேகம் சிரமப்பட்ட போது சென்னை அண்ணாநகரில் உள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் இல்லம் பற்றி அறிந்து என்னை அங்கே சேர்த்தார்கள்.

அங்கே தன்னுடன் சேர்த்து பிறவிக் குறைபாடுகள் உடைய 60 பேருடன் தங்க நேர்ந்தது. அவர்களை விட எனக்கு இது பெரிய ஊனமாக தெரியவில்லை. கல்வி மட்டுமே வாழ்வில் ஒளி தரும் என்பதை உணர்ந்து படிக்கத் தொடங்கினேன். முன்னாள் குடியரசுத்தலைவரின் அக்னி சிறகுகள் நூலை படித்தபோது தன்னம்பிக்கை வளர்ந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறவேண்டும் என்ற கனவும் அதற்கான முனைப்பிலும் ஈடுபட்டேன்.

தினசரி செய்தித்தாள்களில் அரசியல், சமூகம் உள்ளிட்டவைகளை ஆழ்ந்து படிக்கத்தொடங்கினேன். 9-ஆம் வகுப்பு வரை காலால் தான் தேர்வு எழுதினேன். ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் ஒருவர் துணைக்கு அமர்த்தப்பட்டார் அதில் 366 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே 2 - ஆவது இடத்தை பெற்றேன். அரசின் இலவச பஸ் பாஸ் தனக்கு பேருதவியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment