FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, January 14, 2015

வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைப்பதில் சிக்கல்

13.01.2015, ஓசூர்: 
தேன்கனிக்கோட்டை அருகே, பலாத்காரம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி, தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க முதலில் முடிவு செய்த மாவட்ட நிர்வாகம், தற்போது நீதிமன்றத்தை அணுகி, அதன் மூலம் உத்தரவு பெற்ற பின்னர், ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது. தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்திரப்பா என்பவரின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம், 25ம் தேதி, நான்கு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார், அதே பகுதியை சேர்ந்த, நான்கு பேரை கைது செய்தனர். இதையடுத்து, பெற்றோரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, ஓசூர் நரேந்திரா நம்பிக்கை நட்சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்து வருவதால், நீதிமன்றத்தை அணுகி, அதன் மூலம் உத்தரவு பெற்ற பின்னர், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment